பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதானத்தில் குடும்பப்பெண் ஒருவரைத் தாக்கிய இளைஞனை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. ஆலயத்தில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தின்போது இங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பந்தியில் இருந்த இளைஞன் ஒருவன் அருகில் இருந்த பெண்ணிடம் சேஷ்டை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் அவனைத் திட்டிவிட்டு எழுந்து சென்றுள்ளார். அப்öபண்ணை பின் தொடர்ந்த அந்த இளைஞன் ஆலய முன்றிலில் வைத்து அப்பெண்ணைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
இதனை அவதானித்தவர்கள் அவ்விளைஞனைப் பிடித்துக் கட்டிப்போட்டு அப்பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் கல்முனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு அந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. ஆலயத்தில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தின்போது இங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பந்தியில் இருந்த இளைஞன் ஒருவன் அருகில் இருந்த பெண்ணிடம் சேஷ்டை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண் அவனைத் திட்டிவிட்டு எழுந்து சென்றுள்ளார். அப்öபண்ணை பின் தொடர்ந்த அந்த இளைஞன் ஆலய முன்றிலில் வைத்து அப்பெண்ணைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
இதனை அவதானித்தவர்கள் அவ்விளைஞனைப் பிடித்துக் கட்டிப்போட்டு அப்பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் கல்முனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு அந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.