வாகரை அம்மந்தனாவெளி கிராமத்திற்கு மின்சாரம் வழங்கு நிகழ்வு

சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவக்குட்பட்ட அம்மந்தனாவெளி கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கோரளைப்பற்று வடக்கு பிரதேசசபை தவிசாளர் கணேசன் தலைமையில் நேற்று மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கவினால் இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.



இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் மின்சக்தி மற்றும் எரிபொருள் பிரதி அமைச்சர் எச்.எல்.பிறேமலால் ஜயசேகர கிழக்கு மாகாண மின்சக்தி அமைச்சர் உதுமாலெப்வை கிழக்கு மாகாணசபை உறுப்பின் நா.திரவியம் கிராமசேவை உத்தியோகஸ்த்தர் ஊர் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
BY- ஏ.எல் பழு லுல்லாஹ் -