க.பொ.த. உயர்தர பெறுபேறு வெளியாக தாமதமாகும்:

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு மேலும் சில தினங்கள் தேவைப்படுகின்றன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இன்னமும் அறிவிக்கப்படாமை காரணமாகவே உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாமல் இருப்பதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் மேற்படி உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாவதற்கு ஏற்பாடாகி இருந்த நிலையில் காலதாமதமாகி வருகின்றது.

இந்நிலையில், பழைய மற்றும் புதிய கொள்கைத் திட்டங்களுக்கு அமைய மேற்படி இசட் வெட்டுப்புள்ளி முறை தயாரிக்கப்பட்டு வருவதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
--