மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையின் மத்தியில் மரங்கள் நடும் நிகழ்வு

அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பினால் (SOND) சூழல் பாதுகாப்பும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையின் மத்தியில் சூழலுக்குப் பாதுகாப்பான அழகு தரும் மரங்கள் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் ஆரம்பித்து வைத்த இந்த நிகழ்வை SOND நிறுவனப் பணிப்பாளர் திரு. எஸ். செந்தூரராஜா மற்றும் நிறுவன அலுவலர்களால் முன்கொண்டு செல்லப்பட்டது.
இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதான பொலிஸ் ;நிலையத்திலிருந்து தொடங்கி மட்டக்களப்பு கல்லடிப் பாலம் வரை மர நடுகை இடம்பெற்றது.

--