இதுவரை எந்தவொரு பாதிப்பும் கிழக்குக்கரையோரத்தில் இல்லை.


மட்டக்களப்பு, கல்லடி, காத்தான்குடி, தேற்றாத்தீவு, களுவாஞ்சிகுடி, கல்லாறு பிரதேச கரையோரம் மற்றும் தம்பட்டை பிரதேசத்திலும் இதுவரை எந்தவொரு சுனாமி ஆபத்தும் இல்லை. கடலலைகள் சாதாரணமான நிலையிலே இருக்கிறது. ஆயினும் இன்னமும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மக்கள் பாதுகாப்பான இடத்தில் கரையோரத்திற்கு அப்பால் இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள். இந்தோனேசியா சுமாத்திரா பிரதேசத்தில் இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.