கல்முனையில் கஞ்சாவைத்திருந்த பொலில் கான்ஸ்டபிள் ஒருவர்கைது


 (தம்பையா)
கல்முனையில் பொலில் நிலையத்தில் பொலிஸ் பரிசோதனையின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரது பெட்டியில்; கஞ்சா போதை பொருள் வைத்திருந்ததை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில்  கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களை வருடாந்தம் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனை நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிக்கு இந்த பரிசோதனை நடவடிக்கை அம்பாரை மாவட்ட பொலில் அத்தியட்சகர் அஜித்ஹோகன தலைமையில் இடம்பெற்றது
இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பெட்டியில் 250 கிராம் கஞ்சா போதைப்பொருளை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை  பொலில் அத்தியட்சகர் அஜித் ஹோகன கண்டுபிடித்ததையடுத்து அவரை உடன்கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்டபிளை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்