கல்முனை கல்வி வலயத்தில் 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை


கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நாடளாவிய ரீதியிலான ஐயாயிரம் ஆரம்பப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். காசிம் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 65 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.