ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு

( சிவம் ) ஜனாதிபதியின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று   நடைபெற்றது.                    
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி இளைஞர் அமைப்பும் மற்றும் சிவானந்தியின் இளைஞர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருநத இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் யுவதிகள் இரத்ததானம் செய்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

இளைஞர் அமைப்பின் தலைவர் சி.சுகாந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக உதவி அரசாங்க அதிபர் எஸ். பாஸ்கரன், மீழ்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பச் செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ் கல்லடி இராணுவ முகாம் சிவில் இணைப்பாளர் மேஜர் நாலக ஹெட்டிகொட உட்பட  பலர் கலந்து கொள்கின்றனர்.