5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

(அபிவரன்)
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலை 5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 40 வயதுடைய ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்ரவிட்டார்
தங்கவேலாயுதபுரம்  அரச தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்கும் தரம் 5ம் ஆண்டில் கல்விகற்றுவரும் 11 வயதுடைய 5 சிறுமிகளை ஆசிரியர் ஒருர் பாடசாலையில் வைத்து  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் கடந்த செவ்வாய்கிழமை  ஆசிரியரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட ஆசிரியரை நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது  இவரை 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த பாடசாலைக்கு நேற்று புதன்கிழமை இன்று வியாழக்கிழமை மாணவர்கள் எவரும் செல்லவில்லை இருந்தபோதும் பாடசாலை அதிபரையும் ஆசிரியரையும்  உடனடியாக இடமாற்றம் செய்யயப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆசிரியரை உடனடியாக சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அது தொடர்பான நடவடிக்கை எடுத்துவருவதாக திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.