ஜனாதிபதி விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு மேற்கொள்வதற்காக வருகைதந்த இராணுவ ஜீப் விபத்து

சம்மாந்துறை, மாவடிபள்ளியில் இரண்டாம் பாலத்தின் மீது மோதி  இராணுவ ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெல்லவாய இராணுவ முகாமிலிருந்து வருகைதந்துகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.