நற்பிட்டிமுனை விளையாட்டு அபிவிருத்தி சம்மேளனம் நடாத்திய மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி

(சுஹானி)
நற்பிட்டிமுனை விளையாட்டு அபிவிருத்தி சம்மேளனம் நடாத்திய மென்பந்து
கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (19.04.2014)
நற்பிட்டிமுனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அணிக்கு06 பேர் கொண்ட 05 ஓவர் போட்டியாக நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியின்இறுதிப்போட்டிக்கு என்.சி.சி. அணியும் மேன்ஸ் அணியும் தெரிவாகியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை மேன்ஸ் அணி தனதாக்கியது. வெற்றிக் கிண்ணத்தை நற்பிட்டிமுனை விளையாட்டு அபிவிருத்தி சம்மேளனதின் செயலாளரும் ஆசிரியருமான எம்.எம்.ஆசித் மேன்ஸ் அணித் தலைவர் எம்.அர்சாத்திடம் வழங்கிவைத்தார். இரண்டாம் இடத்தை பெற்ற என்.சி.சி அணிக்கான கிண்ணத்தை உடற்கல்வி ஆசிரியா் ஏ.எம்.றியாஸ் வழங்கிவைத்தார்.