'ஆடிய காலும் அதில் சிலம்பொலியும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
இத்தனையும் நாம் எம்புதல்வனிடம் காணவே
என்ன தவம் செய்தோம் எமதன்பு இறையே'
மட்டக்களப்பு முனைத்தீவு தவராஜா விஜயசுந்தரி தம்பதியர்களின் சிரேஷ்ட புதல்வன் நாட்டியக் கலையரசன் மோகனப்பிரியனின் ஆடும் அருள்ஜோதி 'ஓர் தெய்விக நாட்டியப் பயணம்' நடன நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் புதன்கிழமை (30.04.2014) மாலை நடைபெறும்.
சிங்கப்பூர் அப்சராஸ் கலையகத்துடன் இலங்கை அருஸ்ரீ கலையகம் இணைந்து வழங்கும் ;நடனக் கலைகள் நாட்டிய நிகழ்வுகள் கொழும்பு ( 3.05.2014), யாழ்ப்பாணம் ( 27.04.2014), கண்டி ( 26.04.2014) ஆகிய இடங்களில் இடம்பெறும்.