தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில்; உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி

(சிவம்)

இயேசுபிரானின் உயிர்ப்புப் பெருவிழாவான ஈஸ்டர் பண்டீகையை முன்னிட்டு திருப்பலிப் பூஜை இன்று  மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் இடம்பெற்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்து பின்பு மூன்றாம் நாள் மனுக்குலத்து மக்களின் மீட்சிக்காக உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்து இடம்பெற்ற திருப்பலியில் அடியார்கள் பங்கேற்றனர்.

காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குத் தந்தை வணக்கத்திற்குரிய அருட்சகோதரர் சி. ஜே. அன்னதாஸ் மெழுகு திரியை ஏற்றி வைத்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இயேசுவின் உயிர்ப்பின் மேன்மைமையைக் கூறும் வாசகங்கள் இடம்பெற்றதோடு மீட்சிப் பாடல்களும் பாடப்பட்டன.