(ராஜா)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்கல்விப் பயிற்சியினை மேற்கொண்டு வரும் மாணவர்களும் அதன் ஊழியர்களும் கடந்த 17 அன்று அன்று சித்திரைப் புதுவருட விடுமுறையை முன்னிட்டு அம்பாந்தோட்டைக்கு ஒரு நாள் சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
பார்வையிடுவதற்கு திட்டமிட்டபடி புதிதாக அமைக்கப்பட்ட உப்பளம் அதன் பின்னர் துறைமுகம் சர்வதேச விளையாட்டரங்கு மற்றும் சர்வதேச மத்தள விமான நிலையம் என்பவற்றை பார்வையிட்டனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரியின் முதலாவது சுற்றுலாப் பயணம் இதுவென்றும் இவ்வாறான சுற்றுலாப் பயணங்கள் மாணவர்களிடையே ஓர் ஒற்றுமையையும் மன இறுக்கத்தைப் போக்கி எல்லோருடனும் சேர்ந்து மகிழ்வினைப் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்ததோடு இச்சுற்றுலாவின் போது மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுத்தலைவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டதால் குழுச்செயற்பாட்டுடன் தலைமைத்துவ பண்புகளும் அவர்களிடையே வளர்க்கப்படும் என்றும் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.