அமரர் இரா.ஜெந்திரா ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி

(அபிவரன்)
திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அமரர் இரா.ஜெந்திரா ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25 ம் திகதி வெள்ளிக்கிழமை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது என  விளையாட்டுக்கழக தலைவர் வை.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
இவ் சுற்றுப்போட்டி  அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தபட்ட மென்பந்து கிறிகட்; போட்டியாகும் இதில் வெற்றிபெறுகின்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணபரிசும் இரண்டாவது இடத்தை பெறுகின்ற  அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் பெறுமதிவாய்ந்த வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்படுவதுடன் 3ம் இடத்தை பெறுகின்ற அணிக்கு 4 ஆயிரம் ரூபாவும் 4ம இடத்தை பெறுகின்ற அணிக்கு 2 ஆயிரம் ரூபாவும் பணபரிசாக வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் உதயசூரியன் மைதானத்தில்  பெற்றுக் கொள்ளமுடியும் அதற்கான அனுமதிக்கட்டணமாக ஆயிரத்து 200 ரூபாவைச் செலுத்தி அனுமதிபற்றுச் சீட்டை பெற்று போட்டியில் பங்குபற்றலாம் போட்டிகள் யாவும் விலகல்முறையே நடாத்தப்படும்  இப் போட்டியில் பங்கு பற்றும் அணிகள் இது தொடர்பான மேலதிக தகவலுக்கு கிறிக்கட் அணித்தலைவர் சி.சஞ்சீவகாந் 0772252282 அல்லது கிறிக்கட் உபஅணித்தலைவர் த.சுதாகரன் 0752858967 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்