கல்குடா கல்வி வலய அலுவலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் புத்தாண்டு விழா

(வாழைச்சேனை நிருபர்)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கல்குடா கல்வி அலுவலக ஊழியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தான்டு விழா – 2014 கல்வி அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் (22.04.2014) பிற்பகல் இடம் பெற்றது.
கல்குடா கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜாவின் வழிகாட்டலில் ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவியும் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி எஸ்.குலேந்திரகுமார் தலைமையில் இடம் பெற்றது.
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிருஸ்தவ மதத் தலைவர்களின் ஆசிச் செய்தியுடன் ஆரம்பமான புத்தாண்டு விழாவில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு ஊழியர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த அதிஸ்டலாப சீட்டிலுப்பும் இதன் போது இடம் பெற்றது.
இந் நிகழ்வுகளில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.