மகிழடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலய பரிவார மூர்த்திக்கான சங்காபிசேக நிகழ்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மகிழடித்தீவு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலய ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் ஏக தள இராஜகோபுரம் மணிக்கோபுரங்களுக்கு சங்காபிசேக நிகழ்வு நேற்று(15) ஞாயிற்றுக்கிழமை மகிழடித்தீவு வைரவர் ஆலயத்திலிருந்து அடியார்களின் பாற்குடபவனி நிகழ்வுடன் ஆரம்பித்து ஆலயத்தை வந்தடைந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் சிவஸ்ரீ இரா.கு.கோபாலசிங்கம் குருக்கள் அவர்களின் தலைமையில் 108 சங்குகளால் ஆன சங்காபிசேம் இடம்பெற்றது.

இதன்போது அடியார்களுக்கு சங்குத்தீர்த்தம் ஆசிர்வாதம் என்பன வழங்கப்பட்டது.