பத்தினி தெய்வ வழிபாட்டில் சிறப்பாகவிளங்கும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தெற்கே மண்முனை தென் எருவில்பற்றுக்கு தெற்காக உள்ள மகிழூர் கிராமத்தில் குடி கொண்டு அருள்பாலித்து கொண்டிருக்கும் மகிழூர் கண்ணகை அம்மன் ஆலயத்தின் அலங்கார உற்சவமானது 7.6.2014 அன்று ஆரம்பமாகி 13.6.2014அதிகாலை தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது 7.6.2014 திருக்கதவு திறக்கும் நிகழ்வோடு ஆரம்பமாகி 8.6.2014 ஞாயிறு பகல் கண்னிக்கால் வெட்டுநிகழ்வும் இரவு திருக்கலியான சடங்கும் 9.6.2014 திங்கள் காலை கூறைதாலி மாறும் சிறப்பு நிகழ்வும்.இதனை தொடர்ந்து வெள்ளி அதிகாலை விநாயகப்பானை எழுந்தருளப்பண்ணி திருக்குளித்தி ஆடும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.