செங்கலடி ஸ்ரீ மஹா திரிசூல காளியம்மன் ஆலய வருடாந்த உற்சபத்தில் பால்குட பவனி இன்று நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்குட பவனி சந்தை வீதி ஊடாகச் சென்று ஸ்ரீ மஹா திரிசூல காளியம்மன் ஆலயத்தையடைந்தது.
ஆலயத்தில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டதுடன் பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.