தேசியமட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை

(சித்தாண்டி நித்தி) மட்-கல்குடா கல்வி வலயத்திக்குற்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவி தேசியமட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை சாதனைபடைத்துள்ளார்.


கல்குடா கல்வி வலயத்தில் இருந்து தேசியமட்ட தமிழ்த்தின போட்டிக்காக மூன்று போட்டிகள் தெரிவாகிய நிலையில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவி செல்வி.அ.அனோஜா தேசியமட்டத் தமிழ் மொழித்தின இலக்கணப்போட்டி 5ம்பிரிவில் போட்டியிட்டு தேசியமட்டத்தில் முதலாமிடம் பெற்று  சாதனைபடைத்துள்ளார்.



உயர்தரம் கலைப்பிரிவில் கல்விகற்கும் மாணவி செல்வி.அ.அனோஜா தேசியமட்டத்தில் முதலாமிடம் பெற்று  சாதனைபடைத்த வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு மட்டுமின்றி கல்குடா கல்வி வலயம், மாவட்டத்திற்கும் பெருமைசேர்த்து தந்தமைக்காகவும்  இப்போட்டிக்காக பயிற்றுவித்த ஆசிரியரையும் இவ்வேளையில் பாடசாலை சமூகம்சார்பாக பாராட்டுகின்றனர்.