முத்தமிழ் வித்தகரின் இல்லத்தில் நடைபெற்ற 67வது சிரார்த்த தின நிகழ்வுகள்

(சித்தாண்டி நித்தி) காரைதீவு பிறப்பிடமாக கொண்ட சுவாமி விபுலானந்தரின் 67 வது சிரார்த்த தினத்தை பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியமும் சுவாமி மணிமண்டபத்தினரும் இணைந்து கடந்த 19.07.2014ஆம் திகதி சுவாமியின் இல்லத்தில் நடாத்தியிருந்தனர்.

முத்தமிழ் வித்தகரின் இல்லத்தில்  நடைபெற்ற சிரார்த்த தின நிகழ்வின்போது, வருகைதந்ந பெரியவர்களினால் சுவாமியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் சொற்பொழிவும் இடம்பெற்றன. இவ் நிகழ்வுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதா மகளிர் இல்ல சிறுமிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு நடைபெற்ற பூசை, வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.