லண்டனைச் சேர்ந்த யுவதியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது

லண்டனைச் சேர்ந்த 20 வயது யுவதியொருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில், உல்லை அறுகம்பை பிரதேசத்திலேயே இந்த துஷ்பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர் ஒரவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


உடலில் பல காயங்களுடன் நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த லண்டன் யுவதி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரவு 7.30 மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்;கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.