வீடு செல்ல நேரம் தாமதமாகியதால் அணைக்கட்டின் அருகில் இப்தார்

(சித்தாண்டி நித்தி) நீண்ட நாட்களாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை மேற்கில் உள்ள விவசாய நிலங்களுக்கு நிலவி வந்த நீர் தட்டுப்பட்டினை நீக்கும் முகமாக  மாதூறு ஓயா நீர்பாசன திட்டத்தின்  நீர் வசதி வழங்குவதற்க்கான நடவடிக்கையினை பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா நடவடிக்கையினை அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது விவசாயிகள் தங்களுக்கு தேவையான நீரினை பெற்றுக் கொள்ளும் முகமாக கல்குடா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விவாசாய சம்மேளனத் தலைவர் ஜ.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான விவசாயிகள் மகிழ்சியில்  நீர் அணைக்கட்டினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதனையும்  வீடு செல்ல நேரம் தாமதமாகியதால் அணைக்கட்டின் அருகில் இப்தார்  நோன்பு திறத்தலில் ஈடுபட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.