நாவலடி வாவியில் படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் பலி.

(uk batti)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி புதுமுகத்துவாரம் வாவியில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெருவித்தனர்.

ஒய்வு தினத்தினை கழிப்பதற்காக புதுமுகத்துவார வாவிப்பகுதிக்கு நான்கு நண்பர்கள் சென்றிருந்த வேளையில் அங்கிருந்த படகினை செலுத்தி உல்லாசமாக வாவியினை சுற்றிப்பார்க்க முற்பட்ட வேளையிலேயே படகு கவிழ்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் கல்லடி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 23 வயதுடைய அ.யேசுராஜ் எனும் இளைஞனும், பதுளை பகுதியை சேர்ந்தவரும், மட்டக்களப்பில் தனியார் வியாபார முகவர் நிலையமொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவருமான எஸ்.தவமணி எனும் 33 வயதுடைய இளைஞனுமே பலியாகியுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் கிராம வாசிகளின் ஒத்துழைப்புடன் இரு சடலங்களும் உடனடியாக மீட்கப்பட்டதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.