மட்டக்களப்பில் சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் புதிய காட்சியறை

(சிவம்)

கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சாய்ந்நதமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் மட்டக்களப்பு சென் அந்தோனியார் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

புதிய நவீன காட்சியறையை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என். ஏன். அப்துல்லாஹ் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆதமபாவா மீராசாஹிப் மற்றும் முஹமட் முபாறக் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பணிப்பாளர் எம். கணேசராஜா, சிவில் சமுகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என். ஏன். அப்துல்லாஹ் முதலில் கொள்வனவு செய்து விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.