துறவற வாழ்வில் வெள்ளிவிழாக் காணும் அருட்சகோதரி கமலினி!

(தில்லை)
அப்போஸ்தலிக்க கார்மேல் சபையை சார்ந்த அருட்சகோதரி கமலினி அவர்கள் தங்கள் வெள்ளி விழா மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில்  திருப்பலி நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அமரரான திரு.திருமதி அன்ரனி தம்பதிகளின் கடைசி மகளாவார். புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் கல்வியை மேற்கொண்டு, இறை அழைத்தலுக்க செவிமடுத்து, அப்போஸ்தலிக்க கார்மேல் சபையில் இணைந்து கொண்டு 07.01.1989ல் முதல் வாக்குத் தத்தத்தையும் 30.04.1994ல் தனது நித்திய வாக்குத் தத்தத்தையும் செய்து கொண்டார்.

யாழ்ப்பாணம் அக்கரைப்பற்று தேத்தாப்பளை, லுனுகலை, பதுளை, பண்டாரவளை, பொல்காவலை ஆகிய இடங்களில் தனது பணியை ஆற்றி 2002ம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தானில் கல்விப்பணியுடன் விடுதி மாணவிகளை பராமரிக்கும் பணியினையம் ஆற்றி வருகின்றார்.

இந்தத்திருப்பலியில் அவருடன் இந்த வருடம் வெள்ளி விழா கொண்டாடும் ஏனைய அருட்சகோதரிகளும் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.