மட்டக்களப்பில் முதல் பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் தனது முதலாவது பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

ஆலையடிவேம்பு நாவற்காடு பிரிவில் வசித்துவரும் ராஜ்குமார் நிசாந்தினி எனும் தம்பதியினருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளன.

மூன்று குழந்தைகளும் தேகாரோக்கியத்துடன் உள்ளதாக அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்ட வைத்தியர் கே.வித்தியாசங்கர் தெரிவித்தார்.
இப்பிரசவத்தின் மூலம் இரு பெண்குழந்தைகளும் ஒரு ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டது.