மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தையருகில் ஆணின் சடலம் மீட்பு

(சிவம்)

மட்டக்களப்பு மாநகர சந்தையருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆணின் சடலம் ஒன்று காணப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த முத்தப்பிள்ளை கணபதிப்பிள்ளை வயது (57) மரக்கறி வியாபாரியின் சடலம் என வியாபாரிகள் அடையாளங்காட்டியதாக  மட்டக்களப்பு பொலிசார் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி விஜேரத்தின தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் பொலிசார் சடலத்தை போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.