குடி நீர் தாங்கிகள் வழங்கி வைப்பு

(சக்தி)   

ஐரோப்பிய ஆணைக்குழுவின்   நிதியுதவியின் கீழ் அக்ரெட் எனும் அரச சார்பற்ற நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு குடி நீர் தாங்கிகளை  போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து  வழங்கியுள்ளது.

ஒரு லெட்சம் ரூபாய் பெறுமதியில் 6 தண்ணீர் தாங்கிகளை போரதீவுப்பற்று பிரசேத்திலுள்ள பட்டாபுரம், ஆனைகட்டியவெளி, மற்றும் மாலையர் கட்டு ஆகிய கிராமங்களுக்கு ஒரு கிராமத்திற்கு 2 தண்ணீர் தாங்கிகள் வீதம் வழங்கப்பட்டடுள்ளதாக அக்ரெட் நிறுவனத்தின் மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன், தெரிவித்தார்.

இநிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், அக்ரெட் நிறுவனத்தின் மாவட்ட திட்ட உத்தியோகஸ்தர் இ.கஜேந்திரன் மற்றும் போரதீவுப் பற்று அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்தர் ஆகியோர் இணைந்திருந்தனர்.