கல்லடிப் பாலத்து வாவியினுள் சடலம் மீட்பு

(சிவம்)

காத்தான்குடி 5 ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஹமட் சாஜஹான் (வயது 35) என்பவர் சடலமாக கல்லடிப் பாலத்து வாவியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பழுதடையாத நிலையில் உள்ளதால் இன்று காலையிலேயே அவர் விழுந்திருக்கலாம் என காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.