மட்டக்களப்பு நகரில் பல்சமய சூழலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு ஊர்வலமும் வழிபாடும்


(சிவம்)

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டிய வளிபாடு கோட்டைமுனை மெதடிஸ்த தேவாலயத்தில் இன்று சனிக்கிழமை (26) இடம்பெற்றது.

இதனையொட்டிய ஊர்வலம் மட்டக்களப்பு சென் அன்றூஸ் தேவாலயத்திலிரந்து ஆரம்பமாகி நகர வீதிகளினூடாக மெதடிஸ்த தேவாலயத்தை சென்றடைந்தது.

நகரில் பல்சமய சூழலில் வாழும் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து திரச்சபை வேறுபாடுகளின்றி புரிந்துணர்வுடன் வாழ இவ்வழிபாடு ஒழுங்கு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மறை மாவட்ட அயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

மெதடிஸ்த திருஅவை வடகிழக்கு சபா சங்கத் தலைவர் எஸ்.டி. தயாசீலன், அங்கிளிக்கன் திருச்சபையின் எஸ். புp. நேசகுமார், அமெரிக்கன் சிலோன் மிசன், அங்கிளிக்கன், இரட்சியசேனை, மெதடிஸ்தஇ கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபைகள், கிறிஸ்தவ சபைகளிக் குரு முதல்வர்கள், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.