உயர்தர மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு!

(த.லோகதக்சன்)
மட்டக்களப்பு கொமர்ஷியல் கிரடிட் நிறுவனத்தினர் நடாத்தும் மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

கொமர்ஷியல் கிரடிட் நிறுவனத்தினால் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு இவ்வாண்டு தோற்றும் மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.

இக்கருத்தரங்கினை கிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் (ஏரூர் அமரன்) அவர்களின் நடாத்தப்படவுள்ளது.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களை தவறாது கலந்து கொள்ளுமாறு கிளை முகாமையாளர் கேட்டுக் கொள்கின்றார்.