கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வு உபவேந்தர் மற்றும் பல்கலைக்கழக சமூகம்  சார்பில் இன்று (23.07.2014) 4.30மணியளவில் பல்பலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றன. இவ் நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நடைபெற்ற இப்தார் நிகழ்விலும் சிறப்பித்திருந்தார். 

நடைபெற்ற இப்தார் நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத தலைவர்களினால் நல்லாசிகள் மற்றும் சொற்பொழிவுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல்கலைக்கழக உபவேந்தரின் உரை இடம்பெற்றன. 

இப்தார் நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், சபா தலைவர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ் இந்துமாணவர்கள், முஸ்லிம் மாணவர்கள், சிங்கள மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.