பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்தலும் மரம் நடுகை திட்டமும்!

(டில்ஷான்)
சர்வதேச வை.எம்.சி.ஏ. தினம் மற்றும் சர்வதேச சூழல் தினம் - 2014 முன்னிட்டு பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்தலும் மரம் நடுகை திட்டமும் இன்று பாசிக்குடா கடற்கரையில் இடம் பெற்றது.

வை.எம்.சி.ஏ. வாழைச்சேனை கிளையின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இவ் வேலைத்திட்டத்திற்கு கரையோரம் பேனல் திணைக்களமும் வாழைச்சேனை வேல்விஷன் நிருவனமும் அனுசரனை வழங்கி இருந்தது.

வை.எம்.சி.ஏ. வாழைச்சேனை கிளையின் செயலாளர் ஜி.விஜயதர்சன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கரையோரம் பேனல் திணைக்கள மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், வேல்விஸன் நிறுவனத்தின் வாழைச்சேனை பிராந்திய திட்ட இணைப்பாளர் ரீ.ஜெயா கல்குடா கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.