பெரியகல்லாறு மெதடிஸ்த தேவாலயத்தின் ஏஞ்சல்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி.

( ரவிப்ரியா )
பெரியகல்லாறு மெதடிஸ்த தேவாலாயத்தின் ஏஞ்சல்ஸ் முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சனியன்று 26.07.2014 ஜோன் டி பிறிற்றோ பாடசாலை மைதானத்தில், அருட்திரு எஸ்.சசிகுமாரின் ஆரம்ப பிரார்த்தனையுடன்
ஆரம்பமானது. அதிதிகள் வரவேற்று அழைத்துவரப்பட்டு, சம்பிராதய மங்கல விளக்கேற்றலுடன், ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக டாக்டர் எஸ்.ஜோகராஜாவும், விசேட அதிதிகளாக பொறியியலாளர் ஜி.சுஜிதரன், பொறியியலாளர் ரி.தவேந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர். கௌரவ அததிகளாக பங்குத்தந்தை அம்புறோஸ், ஆலய குரு பூராணந்தசர்மா, ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியை திருமதி ஐ.ஆர்.லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சியும், வினோத உடைப் போட்டியும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல் அதிக திலகமிடல் ஆண் பெற்றோருக்கான போட்டியும், பெண் பெற்றோருக்கான சங்கீதக் கதிரையும் சுவரா~pயமாக இருந்தது. சிறார்களின் ஒவ்வொரு போட்டி நிகழ்வும் அவர்களின் திறமைக்குச் சான்று பகிர்ந்தன.

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பிரதம, மற்றும், விஷேட, கௌரவ அதிதிகளாலும், அதிபர் மு.சந்திரசேகரம், மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.கே.ரவீந்திரன் ஆகியோரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அருட்திரு எஸ்.சசிகுமார் போதகரால் பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கிவைக்கப்பட்டு, செயலாளர் எஸ்.தர்சனின் நன்றியுரையுடன் விளையாட்டுப் போட்டி நிறைவு பெற்றது.