மட்டக்களப்பு மாநகர சபையில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகள்

(சிவம்)

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்வு மாநகர சபை மண்டபத்தில் இன்று  இடம்பெற்றது.

மாநகர சபைத் தொழிலாளர்களை பொது மக்கள் அடையாளம் காணும் நோக்கோடு  இச்சீருடைகள் வழங்கப்பட்டதாக ஆணையளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மாநகர ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பச்சைநிற சீருடை 112 சுகாதாரத் தொழிலாளர்களுக்கும், மெருண் நிறத்திலான சீருடை 88 வேலைத் தொழிலாளர்களுக்கும் தலா ஒரு தொப்பியும் இரண்டு செட் சீருடைகளும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர் ஏ. ஜோர்ஜ், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சகாதேவன் அகியோர் சீருடைகளை வழங்கி வைத்தனர்.