சட்ட விரோத கருக்கலைப்பு: சந்தேகத்தில் தாயும் மகளும் கைது

சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தாயும் மகளும் நேற்று  வெள்ளிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மருத நகர் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பப் பெண் 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்திருந்த வேளை, சட்டவிரோதமானமுறையில் கருக்கலைக்க முற்பட்டார்கள் என   தமக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்; இவர்களை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.