மட்டக்களப்பு எருவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பாற்குடப்பவணி

(தில்லை)
ஆடியமாவாசை திருவிழாவினை முன்னிட்டு எருவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் சிறப்பு நிகழ்வான பால்வார்க்கும் நிகழ்வானது விநாயகர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று அங்கிருந்து பால் எடுத்து
வரும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பிரதான குருவினால் பால்வார்க்கும் நிகழ்வு நடைபெறுவதனையும் அடியார்கள் பாற்குடத்தினை ஏந்தியவாறு ஆலயத்தினை வலம்வருவதனையும் சுவாமிக்கு அலங்காரப்பூசை நடைபெற்று அன்னதான நிகழ்வு நடைபெறுவதனையும் காணலாம்.