மட்டக்களப்பில் மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு

(சதீஸ்)
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாபெரும் இலவச கல்விக் கருத்தரங்கு  மட்டக்களப்பு ஒக்ஸ்போர்ட் கல்லூரியினால் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு இவ்வாண்டு தோற்றும் மாணவர்களுக்கான வணிகத்துறை பாடத்திற்கான கருத்தரங்கு 24ம் திகதி வியாழக்கிழமைகிழமை காலை 8.30மணி தொடக்கம் பிற்பகல் 1.30மணி வரை நடைபெறும்.

இதற்கு அனுசரணையாளர்களாக மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கி,கருத்தரங்கு அபான்ஸ் கொம்பனி, யூனியன் அஷ்சுரன்ஸ் பிஎல்சி, கச் வலையமைப்பு, கீயா (Kea)சர்வதேச பாடசாலை போன்ற நிறுவனங்கள் செயற்படுகின்றனர்.

இக்கருத்தரங்கு பிரபல ஆசிரியர் கே.கே.அரஸ் அவர்களினல் நடாத்தப்படவுள்ளது.

இக் கருத்தரங்கிற்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக இப் பாடம் தொடர்பான கையேடுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும். இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனைப்பெறுமாறு இதனை நடாத்தும் ஒக்ஸ்போர்ட் கல்லூரி மற்றும் அனுசரணையாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்