வழைச்சேனையில் "யூனியன் அஷ்யூரன்ஸ்" நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

இலங்கையில் காப்புறுதித் துறையில் அனுபவம்வாய்ந்த விசாலமான நிறுவனமாக இயங்கிவரும் "யூனியன் அஷ்யூரன்ஸ் "நிறுவனத்தின் வாழைச்சேனைக் கிளையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நகரில் நேற்று 24ஆம் திகதி புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

விற்பனை முகாமையாளர் உ.மனோபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் வினியோக பிரதி பொது முகாமையாளர் தர்சன அமரசிங்க அவர்கள் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தினை திறந்துவைத்தார்.

இதன்போது விசேட அதிதியாக கிழக்கு மாகாண வலய முகாமையாளர் ம.ஜெகவண்ணன்  அவர்களும் கலந்துகொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் தலைமை அலுவலகத்தின் உதவி விற்பனை முகாமையாளர் கீர்த்தி முணசிங்கே, கிழக்கு வலய ஆளணி இணைப்பு முகாமையாளர் அ.நிரோஷன், மட்டக்களப்பு யூனியன் அஷ்யூரன்ஸ் பிராந்திய முகாமையாளர் பிரதீப் வசந்த், திருகோணமலை பிராந்திய முகாமையாளர் விக்னேஸ்வரன்,கல்முனை பிராந்திய முகாமையாளர் யூலியன் சசிகுமார், கொமர்சல் வங்கி முகாமையாளர், வாழைச்சேனை பொலீஸ் பொறுப்பதிகாரி, மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பயிற்சி முகாமையாளர் முகுந்தன் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் ஓட்டமாவடியில் இயங்கிவந்த இந் நிறுவனத்தின் அலுவலகம் இனிவரும் காலங்கில் வாழைச்சேனை பிரதான வீதியில் இப் புதிய அலுவலகத்தில் இயங்கவுள்ளது.