திருகோணமலையில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயம்

திருகோணமலை சோனகத் தெருவில் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதலில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.