கல்முனை மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடியமாவாசை திருவிழா!

(தில்லை)
கல்முனை ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடியமாவாசை திருவிழாவின் போது ஆலயத்தில் இருந்து விநாயகப்பெருமான் சப்பிரத்தில் வீதியுலா வருவதற்காகவேண்டி ஆலய உள்வீதி, வெளிவீதிகளை வலம் வந்துகொண்டிருப்பதனையும் ஆடி அமாவாசை திருவிழாவின் சிறப்பு வாய்ந்த அம்சமான பிதிர் கடன்
தீர்க்கும் நிகழ்வானது கல்முனை கடற்கரையில் பிரதம குருவால் இடம்பெற்று பக்தர்கள் தீர்த்தமாடி தமது கடமைகளையும் நிறைவேற்றினார்கள்.

இங்கு மிகவும் விசேட நிகழ்வாக பத்து வருடங்களுக்கு முன்னர் சுனாமி பேரலையால் தாக்கப்பட்டு உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.