முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

தாந்தோன்றீஸ்வரப்பெருமான் திருவேட்டையாடும் சிறப்பு மிக்க வரலாற்று திருத்தலம் முனைக்காடு வீரபத்திரர் சுவாமி ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் 21.07.2014 அன்று திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியதை அடுத்து 3ம் நாள் 23.07.2014 அன்று மதிய பூசையினைத் தொடர்ந்து கிராமத்தில் ஊர்வலமும், இறுதி நாள் அன்று 25.07.2014 அன்று முதன்   முறையாக தீமிதிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து 26.07.2014 அன்று  அதிகாலை  பள்ளயசடங்குடன் இனிதே நிறைவுற்றது.