திருக்கோவில் ஸ்ரீசித்திரலோயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சத்துக்கு கடும் பாதுகாப்பு

திருக்கோவில் ஸ்ரீசித்திரலோயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சத்தின் பாதுகாப்பு கடமைகளில் 150இற்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.எம்.யு.பி.தென்னகோன் தெரிவித்தார்.

ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவலரன் பணிமனையின் மூலம் பொலிஸ் பரிசோதகர் கே.அருள்நாயகமூர்த்தி தலைமையிலான பொலிசார் கடமைகளில் இன்று (24)முதல் ஈடுபடுவர் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வருடம் ஆலய தீர்த்தோற்சவத்தில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதுடன் வருகின்றவர்கள் பெறுமதியான ஆபரணங்களை தவிர்த்தல் சிறந்தது எனவும் அவ்வாறு வருகை தருகின்றவர்கள் பொறுப்புடனும் விழிப்புடனும் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டார். தீர்த்தோற்சவமானது 26ஆம் திகதி நடைபெறும்.