ஐயப்ப சுவாமி பக்தரும் கலைஞருமான கோவிந்தசாமி ஆச்சாரியின் பூதவுடல் கண்ணீர் மல்க நல்லடக்கம்

(சிவம்)
ஐயப்ப சுவாமி பக்தரும் கலைஞருமான மட்டக்களப்பு பயனியர் வீதியைச் சேர்ந்த காத்தமுத்து கோவிந்தசாமி ஆச்சாரியின் பூதவுடல் இன்று (21) மாலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி போன்ற இடங்களிலிருந்து வந்த நகை வியாபாரிகள், திணைக்களத் தலைவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் நேற்றும் (20) இன்றும் (21) அவரது இல்லத்தில் இறுதியஞ்சலி செலுத்தினர்.

கடந்த சனிக்கிழமை (19) கொழும்பு, நாராயன்பிட்டிஓசிஸ் தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.