தைவான் விமான விபத்தில் 51 பேர் பலி - Video

தைவானில் அவசரமாகத் தரையிறங்கிய டிரான்ஸ்ஆசிய விமானம் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று தைவானில் மாட்மோ சூறாவளித் தாக்கியது. புயலின் மையம் சீனாவில் இருந்தாலும் தைவானில் கடும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தலைநகர் தைபேயிலிருந்து பெங்குவிற்கு இந்த விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் அவசரமாகத் தரையிறக்க முயற்சி செய்யபட்டபோது விபத்துக்குள்ளாகி 51 பேர் பலியானதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலை காரணமாக அவசரத் தரையிறக்கம் மேற்கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் 54 பயணிகளும், ஊழியர்களும் இருந்ததாக தைவான் வான்வழிப் போக்குவரத்து நிர்வாகத்துறையினர் தெரிவித்துள்ளனர்.