சற்று முன்னர் மின்னல் தாக்கியதில் சிறுவனுக்கு அதிர்ச்சி! வைத்திய சாலையில் அனுமதி!

(சுழற்சி நிருபர்)
மட்டக்களப்புப் பிரதேசத்தில் இன்று மாலையிலிருந்து இடி மின்னலுடன் மழையும் பெய்துகொண்டிருக்கின்றது.
சற்று முன்னர் ஏறாவூர்- தளவாய் பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் ஒன்பது வயதுச் சிறுவன் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
தளவாய் கிராமத்தைச் சேர்ந்த கே. ராஜு என்ற சிறுவனே இடி மின்;னல் தாக்கத்தில் அதிர்ச்சிக்குள்ளானவராகும். எனினும் சிறுவனின் நிலைமை ஆபத்துக்குள்ளாகவில்லை என்று வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் கூறினார்.