மட்டக்களப்பு அரசடியில் தலைகீழாகப் புரண்டது கார் மூவர் மயிரிழையில் உயிர் தப்பினர்

(சிவம்)

களுவாஞ்சிக்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் கார் ஒன்று அரசடியில் இன்று செவ்வாய்கிழமை (19) திடீரென தலைகீழாக புரண்டதனால் பயணம் செய்த மூவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக மட்டக்களப்பு போக்குவரத்தப் பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி சம்பத் வங்கி முகாமையாளர் எஸ். தயாபரனின் காரை வங்கியின் உதவி முகாமையாளர் என். சாந்தகுமார் செலுத்தி வந்த நிலையில் அரசடியில் உள்ள பயணிகள் கடவையில் வைத்து திடீரென ஸ்டியரிங் இயங்க மறுத்ததால் ( Steering Lock) அருகில் உள்ள கடவைக்கம்பத்தில் மோதி வாகனம் தலைகீழாகப் புரண்டுள்ளது.


பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் வாகனத்தை நேராகப் புரட்டி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.