(Video - Mohamed Mihlar )
ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் ஏறாவூர் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வீதியோரம் நின்றவர்கள் மீது நேற்றிரவு 10.45 அளவில் வேன் ஒன்று மோதியுள்ளது.
அதிக வேகத்துடன் செலுத்தப்பட்ட குறித்த வேன் மோதியதில் நால்வர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதன்போது சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய மூவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் வேனை கைப்பற்றியுள்ள ஏறாவூர் பொலிஸார் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் ஏறாவூர் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வீதியோரம் நின்றவர்கள் மீது நேற்றிரவு 10.45 அளவில் வேன் ஒன்று மோதியுள்ளது.
அதிக வேகத்துடன் செலுத்தப்பட்ட குறித்த வேன் மோதியதில் நால்வர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதன்போது சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய மூவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் வேனை கைப்பற்றியுள்ள ஏறாவூர் பொலிஸார் சாரதியையும் கைது செய்துள்ளனர்.