களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை 6.00 மணியளவில் களுதாவளை பிரதானவீதியின் கலாசார மண்டபத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புவிராஜா – கனிவளன், மகேந்திரன் - பவித்திரன் , மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த தருமலிங்கம் - சிவனேசன், இளையதம்பி - சூரியகுமார், ஆகியோரே படுகாயடைந்துள்ளனர்.
இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த பாண்டிருப்பைச் சேர்ந்த புவிராஜ் கனிவளன் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.